மும்பை: இங்கிலாந்தில் சில நாட்களுக்கு முன் ‘எக்ஸ்இ’ என்ற புதிய உருமாற்ற கொரோனா கண்டறியப்பட்டது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி, மும்பையில் கண்டறியப்பட்டுள்ளார் என, மும்பை மாநகராட்சி நேற்று முன்தினம் அறிவித்தது. தென்னாப்ரிக்காவில் இருந்து வந்த பெண் பயணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி, மரபணு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு இருந்தது, இங்கிலாந்தில் கடந்த ஜனவரியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட எக்ஸ்இ வகை கொரோனா என்பது தெரிய வந்தது என, மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையர் சுரேஷ் ககானி தெரிவித்திருந்தார்.