கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் அரசினர் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி பாதுகாப்பான முறையில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தாலும், காற்று, மழையின் காரணத்தால் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து கீழே விழுந்து விட்டது. சில ஆண்டுகள் ஆகியும் மீண்டும் இதுவரை கட்டாததால் இப்பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது பள்ளி வளாகத்திற்குள் சென்று விடுவதாகவும் அந்நியரின் ஆதிக்கம் பள்ளி வளாகத்தில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.