வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே, ரெங்கப்பநாயக்கர்பட்டியில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கு தோண்டுவதால், தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் சேதமடைகின்றன. இவைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்திராயிருப்பு அருகே, ரெங்கப்பநாயக்கர்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ரேஷன் கடையிலிருந்து ஊருக்கு செல்லும் செல்லும் சாலையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக, பேவர் பிளாக் கற்களை தோண்டியுள்ளனர். குடிநீர் குழாய் பதித்து முடித்தவுடன், பேவர் கற்களை சரியாக பதித்து சாலையை சீரமைக்காமல் உள்ளனர்.