தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை

சென்னை: தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என சமீஹா கோரிக்கை வைத்திருந்தார். போலந்தில் நடைபெற்ற உலக காது கேளாதோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் சமீஹா பர்வீன் பங்கேற்றவர்.   

Related Stories: