மதுரை: கரூரில் உரிமம் இன்றி செயல்படும் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிடக் கோரி ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 8 பார்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஐகோர்ட் கிளையில் தெரிவித்தார். 8 பார்கள் எந்த தேதியில் மூடப்பட்டது என்பது பற்றி விரிவான அறிக்கை தர கரூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.