லாகூர்: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் லாகூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்தமுதல் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன் குவித்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 101 ரன் (72பந்து), மெக்டெர்மாட் 55ரன் எடுத்தனர்.