வேப்பனஹள்ளி : நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் நேற்று வேப்பனஹள்ளி பகுதியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. வேப்பனஹள்ளியில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று பொது வேலை நிறுத்தம் காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் ஏராளமான மாணவர்கள் தங்களது கிராமங்களிலிருந்து நடந்தே பள்ளிக்கு சென்றனர்.