காமராஜர் சிலை பீடத்தில் புகுந்த பால் டேங்கர் லாரி: உடுமலையில் பரபரப்பு

உடுமலை: உடுமலை பழைய பஸ்நிலையம் பகுதியில் காமராஜர் சிலை உள்ளது. சிலையை சுற்றிலும் கம்பிவேலிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் தாராபுரத்தில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பால் ஏற்றிய டேங்கர் லாரி, பழைய பஸ்நிலையம் வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள காமராஜர் சிலை பீடத்தின் தடுப்புகளை தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது.

இதில் சிலைக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories: