வாணியம்பாடி : ₹31 கோடி பணம், 150 சவரன் தங்க நகைகள் புதையல் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ₹56 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் நவமணி. இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த 3 பேர் நவமணியிடம் நண்பர்களாக பழகி ₹31 கோடி பணம் மற்றும் 150 சவரன் தங்க நகைகள் புதையல் இருப்பதாக கூறியும், பணம் செலவு செய்தால் அதனை எடுக்க முடியும் என கூறி கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை நவமணியிடம் ₹3000த்தில் இருந்து தொடங்கி சுமார் ₹56 லட்சம் வரை அவ்வப்போது பல தவணைகளில் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.