தேவதானப்பட்டி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் உள்ள வைகை அணைச் சாலையில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தேவதானப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 900 பேர் படித்து வருகின்றனர். கடந்த வாரம் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், மது போதையில் வந்து, ஆசிரியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். அப்போது, ‘ஏறுனா ரயிலு, இறங்குனா ஜெயிலு, போட்டா ெபயிலு. என்ன யாரும் ஒன்னும் செய்ய முடியாது’ என பேசியுள்ளார்.