திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. சங்கத்தினருக்கும், காங்கிரஸ் சார்பு அமைப்பான கேரள மாணவ சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள சட்டக்கல்லூரில் நேரிட்ட மோதலில் கேரள மாணவ சங்கத்தின் தலைவி சப்னா யாகூப்பை எஸ்.எப்.ஐ. சங்க உறுப்பினர்கள் சரமாரியாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோதலில் தாக்கப்பட்ட கேரளா மாணவ சங்கத்தின் தலைவி உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து சப்னா யாகூப் கூறியபோது, சட்டக்கல்லூரியில் கேரள மாணவர் சங்கம் கிளை தொடங்கி உள்ளோம்.