அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு: கமல்ஹாசன் வரவேற்பு

சென்னை: மருத்துவ உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு உண்டு என்ற தீர்ப்பை வரவேற்பதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பொது சமூகத்தின் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்ற அயர்ச்சி இல்லாமலும், அக்கறையோடும், சுயநலம் கருதாமலும்  பாடுபட்டு வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கு இருந்த ஒதுக்கீட்டு உரிமையை இழந்த அவர்கள், நீண்ட போராட்டத்துக்கு பிறகு இப்போது மீட்டிருக்கிறார்கள். மருத்துவ உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு உண்டு என்ற தீர்ப்பை வரவேற்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: