லோக் ஜனசக்தி தமிழக தேர்தலில் போட்டியிடும்: தேசிய தலைவர் சிராக் பாஸ்வான் பேச்சு

சென்னை: சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று காலை லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இக்கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிராக் பாஸ்வான் கலந்து கொண்டு தொண்டர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது, நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சிறப்பாக பணியாற்றியதால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முதல்வருக்கும், சித்துவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், ஆம் ஆத்மி அந்த மாநிலத்தை கைப்பற்றியது. இனிவரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல்களில் எங்கள் கட்சியும் போட்டியிட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: