கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து நாளை 50 பக்தர்கள் படகில் பயணம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு  திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து 50 பக்தர்கள் நாளை படகில் பயணம் செய்கின்றனர். கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை துவங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. கொரோனா தொற்று நடவடிக்கையால் இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கை, இந்தியா தரப்பில் இருந்து 100 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.  

ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு நாட்டுப்படகு மற்றும் இரண்டு விசைப்படகுகளில் பாதிரியார்கள், பக்தர்கள், படகோட்டிகள் உட்பட 50 பேர் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க, நாளை காலை புறப்படுகின்றனர்.

அவர்கள் செல்லும் 3 படகுகளையும் தமிழக மீன்வளத்துறை இணை இயக்குநர் காத்தவராயன் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: