கீவ் : உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிசக்தி ஆற்றல் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் ஜோபிடன் சமீபத்தில் தடை விதித்து உத்தரவிட்டார். உக்ரைன் மீது 2 வாரங்களாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நகர்வை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.