சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி அருகே சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. அதில் 22 கோர்ட்டுகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி பொன்பாண்டி அவரது அலுவலக வேலையை பார்த்துக் கொண்டிருந்த போது அதே நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் திடீரென கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட நீதிபதி ஊழியரை தடுத்துள்ளார்.