புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து ரூ.22,500 கோடி மதிப்பில் 30 நவீன தாக்குதல் டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது அமெரிக்காவிடம் இருந்து 10 நவீன ரக தாக்குதல் டிரோன்கள் (எம்.கியூ.9 பி) வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு இரு நாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து 30 நவீன டிரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள் வானில் தொடர்ச்சியாக 35 மணி நேரம் பறக்கக் கூடியவை. ரோந்து கண்காணிப்பு, உளவு அறிதல், இலக்குகள் மீது தாக்குதல் உள்ளிட்டவற்றில் இவை சிறப்பாக செயல்படும்.