மன்னார்குடி : கூத்தாநல்லூர் நகராட்சி 20வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட பாத்திமா பஷிரா 338 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட நசீமா பர்வீன் வெறும் 3 ஒட்டு மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்தார்.திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 17 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூ. கட்சி 2 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றி பெற்றது. அதிமுக 3 வார்டுகளிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.