மறைந்த நடிகர் சுஷாந்துக்கு நீதி கோரி போராட்டம்: டெல்லியில் சகோதரிகள் பங்கேற்பு

புதுடெல்லி: மறைந்த நடிகர் சுஷாந்துக்கு நீதி கோரி, அவரது சகோதரிகள் மற்றும் ரசிகர்கள் சார்பில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடந்தது. பீகாரை சேர்ந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். இவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கிளம்பிய நிலையில், இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங் மரண வழக்கை துரிதப்படுத்தவும், நீதி கோரியும் அவரது ரசிகர்கள் மற்றும் சகோதரிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் சுஷாந்தின் சகோதரிகள் பிரியங்காவும் மிது சிங்கும் கலந்து கொண்டனர். அவர்கள், ‘சுஷாந்துக்கு நீதி வேண்டும்’ என்று கோஷமிட்டனர். பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: