புதுடெல்லி: மறைந்த நடிகர் சுஷாந்துக்கு நீதி கோரி, அவரது சகோதரிகள் மற்றும் ரசிகர்கள் சார்பில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடந்தது. பீகாரை சேர்ந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். இவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கிளம்பிய நிலையில், இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங் மரண வழக்கை துரிதப்படுத்தவும், நீதி கோரியும் அவரது ரசிகர்கள் மற்றும் சகோதரிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.