கோவை: கோவை வெள்ளலூர் சந்தைக் கடை பகுதியில் பிளாஸ் குடத்தின் நீரைக் குடிப்பதற்காக நாய் ஒன்று தனது தலை யைக் குடத்துக்குள் விட்ட நிலையில், அதன்பிறகு தனது தலையை வெளியே எடுக்கமுடியாமல் பெரும் அவதிப்பட்டது. கோவை அடுத்த வெள்ளூரில் சந்தைக் கடை சாலை யோரம் சுற்றித்திரிந்த நாய் ஒன்று சாலை பைப் அருகே வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடத்திற்குள் தண்ணீர் குடிப்பதற்காகத் தலையை விட்டுள்ளது.