சேலம்: சேலம் ஜாகீர்காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல். பாரத மக்கள் கட்சி மாநில தலைவரான இவர், சேலம் மாநகராட்சி 1வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரத்தை முடித்தநிலையில், வார்டு பகுதியில் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை செல்போனில் படம் எடுத்துள்ளார். அப்போது அந்த நபர்கள், சுயேச்சை வேட்பாளர் கதிர்வேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சூரமங்கலம் போலீசில் கதிர்வேல் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, சுயேச்சை வேட்பாளர் கதிர்வேல், தனது மனைவி மற்றும் குடும்பத்தார் 8 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.