துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் மகளிருக்கான துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில், செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-4, 6-3 என துனிசியாவின் ஓனஸ் ஜாபூரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.