சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் இயக்கப்படும் நிலையில், தென்மாவட்ட பயணியர் ரயில்கள் முன்புபோல இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. திருநெல்வேலி-திருச்செந்தூர், திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-தூத்துக்குடி, மதுரை-செங்கோட்டை, மதுரை-ராமேஸ்வரம், மதுரை-திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து தென்மாவட்ட பயணியர் ரயில்களும் முழுமையாக இயக்கப்படவில்லை.பயணியர் ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பதால் பணிக்கு செல்வோரும், பொதுமக்களும் கடும் சிரமம் அடைவதை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் தென் மாவட்ட பயணியர் ரயில்களைமுன்பு போல இயக்க அனுமதிக்க வேண்டும்.