தண்டவாளத்தில் சாகச செல்பி 4 வாலிபர்கள் பலி

குருகிராம்: செல்பி எடுக்கும் மோகம் இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. மலை, கட்டிடங்களின் உச்சி, நீர் வீழ்ச்சிகள், ஓடும் ரயில்களுக்கு அருகில் என்று செல்பி எடுத்து உயிருடன் விளையாடுகின்றனர். இதுபோன்ற விபரீத முயற்சியில் ஏற்கனவே பலர் பலியான போதிலும், இந்த மோகம் குறையவில்லை. டெல்லி அருகே உள்ள குருகிராமில் ரயில்வே தண்டவாளத்தில் நின்றபடி நேற்று 4 இளைஞர்கள் செல்பி எடுத்தனர். அவ்வழியாக சதாப்தி எக்ஸ்பிரஸ் மிக வேகமாக வந்தது. ரயில் அருகில் வந்தால் தத்ரூபமாக படம் கிடைக்கும் என செல்பி எடுத்தனர். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் அவர்கள் மீது  மோதியது. இதில், 4 பேரும் உடல் சிதறி பலியாகினர்.

Related Stories: