கூடுவாஞ்சேரி: சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (54). பிரபல தொழிலதிபரான இவர், 5க்கும் மேற்பட்ட டிப்பர் மற்றும் டாரஸ் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது ஒரு டிப்பர் லாரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனது. இதுகுறித்து ஓட்டேரி போலீசில் குருமூர்த்தி புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான டிப்பர் லாரியை தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பெயரில் வேளச்சேரி, காமராஜபுரம், மருதுபாண்டி ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் (63), மேடவாக்கம் புதுநகர், காந்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (40) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.