வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் திடீர் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார்.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர் முத்தையா (43) உள்பட 8 பேர் போட்டியிட்டனர். பிப். 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி முத்தையா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு வீடு, வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். நேற்று அதிகாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.