ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 165வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத், வார்டு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று ஆதம்பாக்கம் குன்றக்குடி நகர், நிலமங்கை நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘என்னை வெற்றி பெற செய்தால் ஆதம்பாக்கம் பகுதியில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைப்பேன். மழைநீர் கால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்படும். தினசரி சுகாதார பணிகள் நடைபெறும்,’’ என்றார்.