நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: நெல்லை முபாரக் பேட்டி

திருச்சி: திருச்சியில் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி: தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை அரசு விரைவில் நடத்த வேண்டும்.  மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வெளியேறும் தனியார் நிறுவனத்திடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.நீட் தேர்வில் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் நலன் உள்ளளது.. எனவே நீட் நுழைவுத்தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: நெல்லை முபாரக் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: