மும்பை: ஐபிஎல் 2022 டி20 தொடருக்கான மெகா ஏலம் நாளை, நாளை மறுதினம் (12, 13ம்தேதிகளில்) நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் அணிக்கு தேவையான வீரர்களை வாங்க, அனைத்து அணிகளும் திட்டம் வகுத்து வருகிறது. குறிப்பாக, ராயல்சேலஞ்சர்ஸ் அணி திறமையான, தகுதியான வீரர்களை ஏலம் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. காரணம், கேப்டன் பதவியிலிருந்து கோஹ்லி விலகிவிட்டதால் அந்த அணிக்கு திறமையான, வெற்றிகரமான கேப்டனை ஏலத்தில் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த மெகா ஏலத்தில் ஜேசன் ஹோல்டர், ஷ்ரேயாஸ் ஐயர், டேவிட் வார்னர் ஆகிய அனுபவமிக்க கேப்டன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரை வாங்க நிச்சயம் ரூ.10 கோடிக்கு மேல் செலவு செய்யவேண்டிய நிலை உள்ளது.