திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை, நாளை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தீபம் ஏற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று விஷேச பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவித்துள்ள கோவில் நிர்வாகம், அடுத்தநாள் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை துவங்கி வைப்பார் என கூறியுள்ளது.