பெரம்பூர்: பெரம்பூர் 37வது வார்டு பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் பிரசாரத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பெரம்பூர் 37வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக டில்லிபாபு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் அரசு பேருந்து போக்குவரத்து பணிமனை எதிரே அமைந்துள்ள பிரம்மாண்ட தேர்தல் பணிமனையை இன்று காலை 9 மணி அளவில் இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். அப்போது அமைச்சருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், வேட்பாளரின் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.