ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளில் தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆட்சியர் பரிந்துரை செய்யலாம், நிலத்தின் தன்மையை வகைமாற்றம் செய்ய நில நிர்வாக ஆணையருக்கே அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு இத்தனை ஆண்டுகளாக ஏன் அனுமதித்தது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பெத்தேல் நகர் குடியிருப்போர் நலசங்கம் தொடுத்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: