திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான வாக்கு சேகரிப்பு பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியில், பழநி நகராட்சி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், கீரனுார் பேரூராட்சிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களது வாக்குகளை செலுத்தலாம் என்பதை உணர்த்தும் விதமாக பழநி நகர மற்றும் பேரூராட்சி பகுதிகளில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.