கோபி : கோபி அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியில் செந்நாய் கடித்து 3 ஆடு, ஒரு சேவல் பலியாகின.கோபி அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (36). கூலித்தொழிலாளியான இவர் 4 ஆடுகள் ஒரு சேவல் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் கால்நடைகளை வழக்கமான மேய்ச்சலில் ஈடுபடுத்தி ஒரு கட்டிடத்தில் கட்டி வைத்துவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல வந்தபோது, 3 ஆடுகள் மற்றும் ஒரு சேவலை மர்ம விலங்கு ஒன்று கடித்து கொன்று இருப்பதும், ஒரு ஆடு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.