சிறுமிக்கு கட்டாய திருமணம் : வாலிபர் போக்சோவில் கைது

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் ஒரு தம்பதி வசிக்கின்றனர். அவர்களுக்கு 17 வயதில் மகள் இருக்கிறாள். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமி, குன்றத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர், குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர். அதில், மாயமான சிறுமி, குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த கரண் (22) என்ற வாலிபருடன் சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார், வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், கரண், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அழைத்து சென்று, திருமணம் செய்து கொண்டார். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கூறி, சிறுமியுடன் நேற்று குன்றத்தூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். உடனே போலீசார், சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த கரணை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: