திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்ட முருகனின் கூட்டாளிகளில் ஒருவர் மீண்டும் கைவரிசை காட்டி சிக்கியிருக்கிறார். ஜாமீனில் வெளிவந்து மதுரை அருகே பூட்டிய வீட்டில் 42 சவரன் நகையை திருடிய கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் 55 வயதான கோபாலகிருஷ்ணன். இவரது வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி கொள்ளை நடைபெற்றது. வீட்டின் கதவை உடைத்து 47 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றார். இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரில் வாடிப்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.