திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் குப்பையை எரிப்பதால் விபத்து அபாயம் நிலவுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளன. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் திரையரங்குகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சில மாதங்களாக இந்த பகுதியில் சேரும் குப்பைகளை திரையரங்கின் அருகில் துப்புரவு பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். பின்னர் குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கின்றனர்.