சம்பரன்: பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டம் ஹர்டியா கிராமத்தில் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலத்தில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த அமைச்சரின் மகன் பப்லு பிரசாத், சிறுவர்களை விரட்டினார். ஒருகட்டத்தில் சிறுவர்களை பயமுறுத்துவதற்காக துப்பாக்கியை காட்டி தாக்கினார். மேலும் சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவத்தால் சிலர் காயம் அடைந்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், அமைச்சரின் வீட்டுக்கு சென்று அவரது காரை அடித்து நொறுக்கினர். மேலும் பப்லுவையும் சரமாரியாக தாக்கினர். தகவலறிந்த போலீசார், அமைச்சரின் வீட்டிற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.