லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோட் உடன் நேற்று மோதிய சிந்து அதிரடியாக விளையாடி 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இப்போட்டி 35 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சையது மோடி தொடரில் சிந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2017ல் அவர் இத்தொடரில் பட்டம் வென்றிருந்தார்.