சின்னசேலம் : சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தண்ணீர் மற்றும் குளிர்பான குடுவைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் காந்தி நகர், சேலம் மெயின்ரோடு, வாரசந்தையை ஒட்டியுள்ள சாக்கடை கால்வாய்கள், ஏரிக்கரை மற்றும் நீர்நிலை, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் குப்பைமேடு போல் தேங்கி கிடக்கிறது. ஆனால் சின்னசேலம் பேரூராட்சியில் அன்றாடம் கடைவீதியில் கிடக்கும் பிளாஸ்டிக்கழிவுகளை மட்டும்தான் அள்ளுகின்றனர். சாக்கடை கால்வாய்களில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை.