குற்றம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய வட்டார சுகாதார ஆய்வாளர் உள்பட 3 பேர் கைது!: போலீசார் விசாரணை..!! Jun 05, 2021 கட்டுமன்னர்கோயில் கடலூர் Kattumannarkovil கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவரை தாக்கியதாக வட்டார சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடலூர் மாவட்டம் வாண்டையார் இருப்பு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு விக்ரமன் என்ற மருத்துவர் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிய வட்டார மருத்துவ ஆய்வாளர் குணபாலன் இடமாற்றம் செய்துள்ளார். அங்கு பணியாற்றிய மருத்துவர் விக்ரமன் ஒருநாள் விடுமுறையில் இருந்த போது அவசர தேவைக்காக வாண்டையார் இருப்பு மருத்துவமனைக்கு வந்து மருத்துவம் பார்த்துள்ளார். இதனையறிந்த குணபாலன் அவரது ஓட்டுநர் மற்றும் தற்காலிக பணியாளர் ஒருவருடன் வந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்த மருத்துவரை தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குமராட்சி காவல் நிலையத்தில் மருத்துவர் விக்ரமன் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வட்டார மருத்துவ அலுவலர் குணபாலனுக்கு மருத்துவர் விக்ரமன் மீது இருந்த காழ்புணர்ச்சியால் தாக்குதல் நடத்தி இருப்பதாக கிராமமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆய்வுக்கு சென்ற போது விக்ரமன் தங்களை தாக்கியதாக வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக குமராட்சி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். … The post கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய வட்டார சுகாதார ஆய்வாளர் உள்பட 3 பேர் கைது!: போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.
சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் கோயில் பூசாரி மீது போலீசில் நடிகை பரபரப்பு புகார்
10 பேர் பலியான பட்டாசு ஆலையில் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல்: போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய டூவீலர்கள், ஆட்டோ பறிமுதல்
உடுமலை அருகே கொடூரம் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
பிரபல திரைப்பட பாணியில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது: 2 கார்கள், 3 செல்போன்கள், ஆயுதங்கள் பறிமுதல்