லக்னோ: உத்திரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்திருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் மேலும் 13 பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாகவும் சரத்பவார் தெரிவித்திருக்கிறார். உத்திரப்பிரதேசத்தை தொடர்ந்து கோவாவில் வலுவான அணி அமைக்க முயற்சி செய்து வருவதாகவும் பவார் தெரிவித்தார்.