திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பெரிய பாறை விழுந்ததில் மூன்று சாலைகள் சேதமடைந்தன. இதனால், திருமலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் முதலாவது மலைப்பாதை வழியாக திருமலைக்கு திருப்பி விடப்பட்டன. இந்நிலையில், பாறைகள் சரிந்து விழுந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், பாறைகள் விழும் நிலையில் உள்ளவற்றை அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.