இராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திரிபுலானி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி பயிராக 1000 ஏக்கர் பரப்பளவில் நெல்சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாக புதுவூர், நேர்புறம், மேதலோடை, வெள்ளையன்வலசை, மொட்டையன்வலசை, அய்யனார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி நெல்மணிகள் முளைத்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேறு வழியின்று விதை நெல்லின் தேவைக்காக மூழ்கிய நெற்கதிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.