ஸ்பிக்நகர்: தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சீல்வைக்கப்பட்ட குடோனில் இருந்த தாது மணலை லாரியில் கடத்த முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு பகுதியில் பிஎம்சி நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள தாது மணலை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதோடு குடோனுக்கும் சீல் ைவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாதுமணலை பேக்குகள் மூலம் நேற்று முன்தினம் இரவு லாரியில் ஏற்றி கடத்த முற்படுவதாக தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் மற்றும் உதவி இயக்குநர் பொறுப்பு வகிக்கும் சுகதா ரஹீமாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.