அனைத்து வகையான மாநில அரசு பணிகளுக்கும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

சென்னை: அனைத்து வகையான மாநில அரசு பணிகளுக்கும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் வகையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆவின், மின்வாரியம், போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அமைப்புக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் இனி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்துவைத்தார்.

Related Stories: