ஆவடி: திருநின்றவூரில் வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த திருநின்றவூர் அருணாச்சலம் நகர் 2வது தெருவில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் (42). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றார். இவரின் மனைவி ஜெயக்குமாரி (36). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். இவர்களது மகன் தமிழரசு (16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்1 படிக்கிறார். வழக்கம்போல் நேற்று காலை மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ராதாகிருஷ்ணன் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் தமிழரசு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.