ரவுடி பேபி சூர்யா கைது: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை

கோவை: யூடியூபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சூர்யா மற்றும் அவரது காதலர் சிக்கா ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த யூடியூப் தம்பதியினர் அவர்களது யூடியூபில் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில் இவர்களது 10 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைன் மூலம் பாடங்கள் பயில்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசிய காணொலி ஒன்றை அவர்களது யூடியூபில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்த ரவுடி பேபி சூர்யா, அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் இது தொடர்பாக தம்பதிகளும், சூர்யாவின் யூடியூப் லைவ்வில் பதிலளிய்ததாகவும் அதற்கு சூர்யா, மோசமான வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தம்பதிகளின் செல்போன் எண்களை தனது எண் என தனது யூடியூப் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பலரும் தம்பதிகளை அழைத்து, சூர்யா என நினைத்து மோசமான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதிகள் இது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து, மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, அவரது நண்பர் என அழைக்கப்படும் சிக்கா ஆகிய இருவரையும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, கோவை அழைத்து வந்தனர். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரிடம் விசாரணை நடத்திய போலீசார்  பின்னர் ஆன்லைனில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சூர்யாவை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: