ஸ்ரீநகர் : காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் நாராயணா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், டெல்லி, அரியானா, பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது