புதுடெல்லி: நாகலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி நாகா கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் நீட்டித்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் கடந்த 1963ம் ஆண்டு முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் இருந்து வருகிறது. மோன் மாவட்டத்தில் கடந்த 4ம் துணை ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறும்படி கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதனால், இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக ஆராய, ஒன்றிய அரசு சமீபத்தில் உயர்நிலை குழு அமைத்தது.